Thursday, 16 April 2015

வேண்டும் பாலூட்டும் அறை

விமலா விழித்துக்கொள் மணி 7 ஆச்சு, காலை உணவு தயாராகிவிட்டது, மேஜையில் காபி வைத்துள்ளேன், முகத்தை கழுவிக்கொண்டு வா. விமலா புதிய இசை மெட்டுடன் கொட்டாவி விட்டு கொண்டு படுக்கையிலிருந்து எழுந்தாள், பல் விளக்கி விட்டு வந்தவுடனே இன்று மாலை எத்தனை மணிக்கு வருவிங்க? என்று விசாரித்தாள். நான் மாலை 6 மணிக்குள் வந்து விடுவேன் நீ அதற்குள் துணிக்கு இஸ்த்திரி போட்டு பையில் வைத்துவிடு, குழந்தையை குளிப்பாட்டி தயாராக இரு அப்பதான் நாம் ரயில் நிலையத்திற்கு சிக்கிரம் போக முடியும், தாமதமாக கிளம்பினால் போக்குவரத்து நெரிசலில் சிக்கிகொள்வோம். சரிங்க நான் மாலை நீங்கள் வருவதற்குள் தயாராக இருப்பேன் என்றாள்.
பிறகு இருவரும் காபி அருந்தி கொண்டிருந்தோம், அப்பொழுது கதவு தட்டும் ஓசை கேட்டது, யார்? என்று பார்பதற்காக விமலா சென்றாள், நம்ம ஜீவா தான் வந்துருப்பான் என்றேன், விமலா கதவை திறந்தால் ஜீவா செல்போனில் யாரோ ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தான். வாங்க அண்ணே என்று விமலா அழைத்தாள், செல்போனில் பேசிக்கொண்டே வந்து சோபாவில் அமர்தான் ஜீவா.
செல்போனில் பேசிமுடித்துவிட்டு பிறகு ரமேஷ் இன்னைக்கு கோயம்புத்தூர் போறதா சொன்ன? என்று கேட்டான்
ஆமாம் டா ஜீவா இன்னைக்கு சாயங்காலம் வந்தவுடனே கிளம்பவேண்டும்

சரி காபி சாப்பிடு ஜீவா, விமலா காபி கொடுத்தாள், மூவரும் அருந்தினோம், ஜீவா சிறிதளவு காபி குடித்துவிட்டு அண்ணி நீங்களா காபி வைத்தீர்கள்? என்று கேட்டான், இல்லை உங்கள் நண்பர் தான் வைத்தார் என்றாள் விமலா
ரமேஷ் நிஜமாவே நீ தான் வச்சியா?
ஏன்டா என்ன சந்தேகம் ?
நம்ம கார்த்திக் பேக்கரி காபி டேஸ்ட் மாதிரி தெரிஞ்சுது அதன் கேட்டேன்
கார்த்திக் பேக்கரி கடைல காபி வாங்கினா அந்த டேஸ்ட் தான் இருக்கும் என்றேன்

ஜீவா விமலாவை பார்த்து என்னங்க ரமேஷ் தான்  காபி வைத்தார் என்று சொன்னிங்க? ஆமாம் அவர் தான் கடைக்கு போய் காபி வாங்கி வைத்தார், (சிரித்துக் கொண்டே) அதனாலே தான் உங்கள் நண்பர் காபி வைத்தார் என்று சொன்னேன்  
ஜீவா அரை சதவிதம் சிரித்துக்கொண்டு ரமேஷ் உன்னை போலவே அண்ணியும் காமெடி பண்ண ஆரம்பித்துவிட்டார்கள்  என்றான்.
ஆமாம் டா ஜீவா இன்னைக்கு பால்காரன் வரல அதனால் தான் இன்று பேக்கரி காபி இல்லையென்றால் பில்ட்டர் காபி.
ஜீவா காபி குடித்துவிட்டு எங்கடா உன் பையன் சரவனணன் துங்கிட்டு இருக்கனா? என்று கேட்டான்
ஆமாண்டா ஜீவா
ரமேஷ் உன் பையனுக்கு வயசு பத்து மாசம் இருக்குமா ?
ஒன்பது மாசம் ஆச்சு ஜீவா.
ஜீவா ஆபீசுக்கு நேரம் ஆச்சு கிளம்புவோம் என்றேன்.
சரி விமலா புறப்படுகிறோம் மாலை 6 மணிக்கு தயாராக இரு
அண்ணி புறப்படுகிறேன் என்றான் ஜீவா   
ஸ்டாண்டை எடுத்துவிட்டு பைக்கில் அமர்ந்தேன் அப்பொழுது ஜீவா என்னிடம் கையில் 500 ரூபாய் இருக்கிறதா என்று கேட்டான். 300 ரூபாய் தான் இப்போ இருக்கு ஏன்டா ஜீவா?
ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டினால் 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் மறந்திட்டியா? என்றான் ஜீவா, நல்ல வேலை ஞாபகப்படுத்தினாய், பிறகு ஹெல்மெட் அணிந்து கொண்டு  இருவரும் கிளம்பினோம்.

தாம்பரம் சிக்னலில் நின்றோம். ரமேஷ் இன்னைக்கு நீதானே சமையல்? என்று கேட்டான் ஜீவா.

ஆமாம் எப்படி தெரியும், ரமேஷ் வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை நீதானே சமைப்பாய், இன்று வெள்ளிக்கிழமை தானே அதான் கேட்டேன்.
ஆமாண்டா ஜீவா பாவம் விமலா கைக்குழந்தையை வைத்துக்கொண்டு சமையல் வேலை, வீட்டு வேலை கவனித்துக்கொள்கிறாள், வாரத்திற்கு இரண்டு நாள் நான் சமையல் செய்வேன், ஞாயிற்றுக்கிழமை இருவரும் சேர்ந்து சமைப்போம், இதனால் விமலாவுக்கு கொஞ்சம் சுமை குறையும்.
நல்லது. கோயம்புத்தூர் போய்விட்டு எப்போ வருவே ரமேஷ் ?
ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னைக்கு வந்துவிடுவோம். பச்சை விளக்கு எரிவதற்குள் பின் வரிசை வாகனத்தில் இருந்தவர்கள் ஒலி எழுப்பிக்கொண்டு இருந்தனர், நான் சற்றே நின்று பச்சை விளக்கு எறிந்த பின்னரே சென்றேன்.

வேலை முடிந்த பிறகு ஜீவாவை வீட்டில் விட்டுவிட்டு, 5.45 மணிக்கு வீட்டிற்கு சென்றேன், விமலா அப்பொழுது குழந்தைக்கு உடை அனிவித்துக் கொண்டிருந்தால், சிறிது நேரத்தில் கிளம்பினோம், கால் டாக்ஸி மூலம் ரயில் நிலையத்திற்கு சென்றோம்.
கோயம்புத்தூர் செல்லும் ரயிலுக்காக பிளாட்போரம் ஓரத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்தோம், கோயம்புத்தூர் செல்லும் ரயில் 20 நிமிடங்கள் தாமதமாக வந்துகொண்டிருப்பதாக அறிவிப்பு வந்தது, குழந்தை பசியால் அழ ஆரம்பித்தது, குழந்தைக்கு பசிக்கிறது பாலூட்டவேண்டும் என்றால் விமலா. அப்பொழுது ஆபீஸ் எண்ணிலிருந்து கால் வந்தது, நான் போனை எடுத்து ஹெலோ என்றேன் எதிர்த்தரப்பிலிருந்து குரல் ஏதும் கேட்கவில்லை, பிறகு நான் ஆபீஸ் எண்ணிற்க்கு அழைத்தேன் அழைப்பு செல்லவில்லை, போனில் டவர் சிக்னல் எதுவுமில்லாமல் இருந்தது, இதுவரை மாலை நேரத்தில் ஆபீசிலிருந்து கால் வந்ததில்லை, மேனேஜர் வந்திருப்பாரோ என்று யோசித்தேன், இந்த நேரம் பார்த்து போனில் டவர் சிக்னல் எதுவும்மில்லாமல் இருக்கிறதே என்ன செய்யலாம் என்று யோசித்து விமலா போனிலிருந்து அழைக்கலாம் என்று வாங்கியபோது அவளுடைய போனிலும் டவர் சிக்னல் எதுவுமில்லாமல் இருந்தது. பிறகு விமலாவிடம் நான் கடைக்குச் சென்று தொலைபேசியில் பேசிவிட்டு வருகிறேன் நீ இங்கேயே இரு என்று கூறிவிட்டு கடையை தேடி நடக்க ஆரம்பித்தேன்.   

விமலா குழந்தையின் பசியை போக்க பாலூடிக் கொண்டிருந்தாள், குழந்தை பால் குடித்துக் கொண்டே ஒரு கையால் விமலாவின் கன்னத்தை தட்டிக் கொண்டிருந்தது, அவ்வாறு குழந்தை கன்னத்தை தட்டிக் கொண்டு, சிரித்துக்கொண்டு விமலாவை பார்த்தது, விமலா மகிழ்ச்சி அடைந்தாள், விமலா மழலையின் சிரிப்பையும், அதன் அழகையும் ரசித்துக்கொண்டே பாலூட்டிக் கொண்டிருந்தால், இந்த மகிழ்ச்சியான தருணத்தில் விமலா கணவனின் வருகைக்காக சுற்றி பார்த்தாள் தென்படவில்லை, மறுமுறை சுற்றி பார்த்தபொழுது 4 வாலிபர்கள் அவள் பாலூட்டிக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இதை கவனித்த விமலா அதிர்ச்சி அடைந்தாள், இத்தகைய நிலையில் பாலூட்ட தயங்கினாள் விமலா. வாலிபர்கள் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருந்தார்கள், இதனால் விமலா மிகுந்த வேதனை அடைந்தாள், இப்படி வாலிபர்கள் பார்த்துக் கொண்டிருக்க குழந்தைக்கு பாலூட்ட சிரமப்பட்டால், ஏன்? இங்கு வந்தோம் என்று மனதுக்குள் குமரினாள், இதனை தவிர்க்க வேறு வழியின்றி பாலூட்டுவதை தவிர்த்து குழந்தையை விலக்க முயற்சித்தாள், அப்பொழுது குழந்தை அழ ஆரம்பித்தது, என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தாள் விமலா.

 பிறகு புடவையை நன்கு இழுத்துவிட்டு பாலூட்ட ஆரம்பித்தாள் விமலா, கணவனை தேடி மீண்டும் சுற்றி பார்த்தாள் அப்பொழுது அந்த 4 வாலிபர்களில் ஒருவன் செல்போனை சாய்வாக படம் பிடிப்பதுபோல் பிடித்துக் கொண்டிருந்தான், விமலா பார்ப்பதை உணர்ந்த வாலிபன் பட்டென்று செல்போனை மறைத்து வைத்தான், தான் பாலுட்டுவதை படம் பிடித்துவிட்டார்கள் என்று உணர்ந்த விமலா ரௌதிரத்துடன் எழுந்து வாலிபர்களை நோக்கி நடக்க ஆரம்பித்தாள், இதை கண்ட வாலிபர்கள் ஓட்டம் பிடித்தார்கள், விமலா மேலும் நடக்க குழந்தை அழ ஆரம்பித்தது வேறு வழியின்றி குழந்தையோடு இருக்கையில் அமர்ந்தாள்.
இச்சம்பவத்தை யாரும் பார்த்ததாக தெரியவில்லை. நான் அலுவலகத்தில் மேனேஜர் உடன் பேசிவிட்டு திரும்பி வந்தபொழுது குழந்தையும், விமலாவும் அழுது கொண்டிருந்தனர். நான் அதிர்ச்சி அடைந்தேன், என்ன நடந்தது? ஏன் அழுகிறார்கள்? என்று அறியாமல் தவித்தேன். விமலா அருகில் அமர்ந்து, அவளை பார்த்து  என்ன ஆச்சு? ஏன் அழுது கொண்டிருக்கிறாய்? என்று கேட்டேன்.

விமலா பேச முடியாமல் துடித்தாள், எனது வலது கை தோளில் சாய்ந்து அழுதாள், அவளது கண்ணீர் துளிகள் எனது தோள் பகுதி சட்டையை ஈரம் ஆக்கியது. விமலாவை கவனிப்பதா? அல்லது குழந்தையை கவனிப்பதா? இருவருமே அழுகின்றனர், யாரை முதலில் கவனிப்பது என்று தெரியாமல் தவித்தேன். பிறகு விமலாவிடமிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டு சிறிது நேரம் தாலாட்டி, பேனாவை கொடுத்தேன், பேனாவை கையில் கேட்டியாக பிடித்துக் கொண்ட குழந்தை அழுகையை நிறுத்தியது.
மீண்டும் விமலாவிடம் என்ன நடந்தது? ஏன் அழுகிறாய்? என்று கேட்டேன், அவள் எனது தோளில் சாய்ந்தபடியே விம்மிக்கொண்டு நடந்ததை சொல்லத் தொடங்கினாள், அவள் சொல்ல சொல்ல மனதில் துக்கமும், கோவமும் அதிகரித்தது. நடந்தவற்றை சொல்லி முடித்தும் விமலாவிற்கு அழுகை நிற்கவில்லை, எனது தோள் சட்டை பகுதி முழுவதும் அவளது கண்ணீரினால் ஈரம் அடைத்தது, எனது கண்களிலும் நீர் வடிந்தது. அப்பொழுது தான் எனக்கு ஞாபகம் வந்தது, நான் தொலைபேசியில் பேசி முடித்து விட்டு வெளியே வந்தபொழுது நான்கு வாலிபர்கள் ஒரு வித பதட்டத்துடன் வேகமாக என்னை கடந்து சென்றனர், விமலா கூறிய வாலிபர்கள் அவர்களாக இருக்குமோ என்று யோசித்தேன். விமலாவோ அழுது கொண்டே இருந்தாள், இச்சம்பவத்தை பற்றி மேலும் பேசினால் விமலா அழுது கொண்டே இருப்பாள், எனவே இச்சம்பவத்தை பற்றி பேச வேண்டாம் என்று எண்ணினேன்.
பிறகு விமலாவை சமாதனம் செய்து கொண்டிருக்கும் பொழுது கோயம்புத்தூர் செல்லும் ரயில் பிளாட்போரத்தை வந்தடைந்தது. நான் குழந்தையை எடுத்துக்கொண்டு விமலாவுடன் ரயிலை நோக்கி நடந்தேன், ஆனால் மனதில் பெரும் வேதனையை சுமந்து கொண்டு நடக்க முடியாமல் திணறினேன். ரயில் அருகில் இருந்தாலும் தொலைவில் இருப்பது போல் தோன்றியது, ஒரு வழியாக துயரத்தோடு ரயிலில் ஏரி இருக்கையில் அமர்தோம்.

இதுவரை நான் விமலாவை அழவிட்டதும் இல்லை, அழுது பார்த்ததும் இல்லை, ஆனால் தொலைபேசியில் பத்து நிமிடம் பேசிவிட்டு வருவதற்குள் இவ்வாறு நடந்துவிட்டதே என்று மனம் துயரமடைந்தது, மேலும் அவள் அழுகைக்கு என்ன பதில் சொல்ல முடியும்?, இதற்கு பதில் உண்டா? என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது விமலா ஏங்க நாம் கோயம்புத்தூர்க்கு செல்ல வேண்டாம், வீட்டிற்கு செல்வோம் என்றாள், நான் ஏன் என்று கேட்டேன்?. கோயம்புத்தூர்க்கு சென்றால் என்னுடைய அம்மா என்னை பார்த்து எப்படி இருக்கிறாய்? என்று நலம் விசாரிக்கும்பொழுது என்னால் பதிலளிக்க இயலாது என்று சொல்லிவிட்டு அழ ஆரம்பித்தாள்.

ரயில் இன்னும் பிளாட்போரத்தில் நின்று கொன்றிருந்தது, நான் சிறிது யோசித்தேன், விமலா அவளது அம்மாவிடம் இச்சம்பவத்தை கூறினால் அவர்கள் மிகவும் வேதனை படுவார்கள், ஏற்கனவே அவர்களுக்கு உடல் நிலை சரியில்லை, இந்த நிலைமையில் அங்கு செல்வது சரியாக இருக்காது என்று முடிவுசெய்து விமலா கூறியது போலவே ரயிலிருந்து கிழே இறங்கி கால் டாக்ஸி பிடித்து விட்டிற்கு சென்றோம், வரும் வழியில் விமலாவின் அம்மாவிற்கு செல்போனில் அழைத்து உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கோயம்புத்தூர்க்கு வர இயலவில்லை என்று கூறிவிட்டேன்.

அன்று இரவு மிக நிளமாக இருந்தது, உறக்கமின்றி படுக்கையில் படுத்து யோசித்துக் கொண்டிருந்தேன். நேரம் மிக மெதுவாகச் சென்றது, விமலா சினிங்கிக் கொண்டே படுத்திருந்தாள், அவள் முழுமையாக உறங்கியதாக எனக்கு தோன்றவில்லை. ஒரு வழியாக பொழுது விடிந்தது, நான் 5.30 மணிக்கெல்லாம் எழுந்து சமையல் செய்து விட்டு, குளிக்கச் சென்றேன்.
பிறகு விமலாவை எழுந்திரிக்கச் சொல்ல தொட்ட பொழுது உடல் வெப்பமாக இருந்தது, காய்ச்சலாக இருக்குமோ என்று எண்ணி எழுப்பினேன், அவளது கண்கள் வீக்கம் அடைந்து சிவப்பாக இருந்தது. அவள் சோர்வாக இருந்தாள், நான் சென்று ஆட்டோவை பிடித்து விமலாவை அழைத்துக் கொண்டு மருத்தவமனைக்கு சென்றேன். பிறகு டாக்டர் விமலாவை கேள்வி கேட்டுக் கொண்டே சிகிச்சை மேற்கொண்டார், இடையே என்னையும் கவனித்தார், மருந்து குறிப்புகளை கொடுத்து விமலாவை வெளியே இருக்குமாறு கூறினார். பின்னர் என்னிடம் உங்களுக்குள் சண்டையா? என கேட்டார், நான் இல்லை என்றேன். உங்களது மனைவியின் காய்ச்சலுக்கு காரணம் உடல் நலக் குறைவு மட்டும் அல்ல மனநலக் குறைவும் தான், அவர்களை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள், அவர்களது மனதை தேற்றுங்கள் என்றார் டாக்டர். பிறகு மருந்துகளை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு திரும்பினோம்.   
அவர்களை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள், அவர்களது மனதை தேற்றுங்கள் என்று டாக்டர் கூறியது மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. மனம் மிகவும் தடுமாறியது, அப்பொழுது ஜீவாவின் ஞாபகம் வந்தது அவன் நல்ல சிந்தனையாளன், மனத் தெளிவு உடையவன் அவனிடம் இச்சம்பவத்தை தெரிவித்து ஒரு தீர்வு காண வேண்டும் என்று எண்ணி செல்போனில் ஜீவாவை அழைத்து முக்கியமான விஷயம் எப்பொழுது வருகிறாய் என்று ஒரு வித பதட்டத்துடன் கேட்டேன், 20 நிமிடத்தில் வருகிறேன் என்றான் ஜீவா.

ஜீவா வந்தான், அவனை அழைத்து கொண்டு மாடிக்குச் சென்றேன். நடந்தவற்றை கூறினேன், இது மட்டும்மில்ல ஜீவா இப்போ விமலாவுக்கு காய்ச்சல் டாக்டரிடம் சென்றோம், அவர் உங்களது மனைவியின் காய்ச்சலுக்கு காரணம் உடல் நலக் குறைவு மட்டும் அல்ல மனநலக் குறைவும் தான், அவர்களை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள், அவர்களது மனதை தேற்றுங்கள் என்றார். மனசு தடுமாறி குழப்பமாக இருக்கு ஜீவா என்னடா செய்யலாம்?

ரமேஷ் நீ சொல்வதை பார்த்தல் உன் மனைவிக்கு தான் பாலூட்டுவதை அந்த வாலிபர்கள் படம் பிடித்து இணையதளத்தில் விட்டிருப்பார்களோ என்ற சந்தேகம் கலந்த பயம் வந்துருக்கிறது. ஜீவா எப்பிடியாவது இந்த பிரச்னையை ஒரு முடிவுக்கு கொண்டுவரணும் என்ன செய்யலாம்?, இதை எப்படி தடுப்பது? என்று ஜீவாவை கேட்டேன்.

ரமேஷ் உன் மனைவிக்கு ஏற்பட்டது போல் பல பெண்களுக்கும் இப்பிரச்சனை ஏற்படுகிறது ஆனால் யாரும் இதை தட்டிக் கேட்பதில்லை, நான் சென்ற வருடம் பெங்களூர் செல்வதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்தபொழுது விமலாவை போல அங்கே ஒரு பெண் தன் குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருந்தாள், அதை அங்கிருந்த பல வாலிபர்கள் பார்த்தனர், அப்பெண் மிகுந்த வேதனை அடைந்தாள், இதனை போன்றே பேருந்து நிலையம் முதலிய பொது இடங்களில் இத்தகைய சம்பவங்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது என்றான் ஜீவா.
அப்போ இதற்கு தீர்வே இல்லையா? ஜீவா. தீர்வு என்பது அனைத்து பெண்களுக்காக இருக்க வேண்டும் அதான் யோசிக்கிறேன். ஒரு தீர்வு இருக்கிறது ரமேஷ் என்ன தீர்வு? ஜீவா, விமான நிலையத்தில் பல ஆண்கள் புகைப் பிடிக்கிறார்கள் என்பதற்காக புகைப் பிடிப்பதற்கு என்றே தனி அறை இருக்கிறது. இதனை போன்றே பெண்களுக்கும் பாலூட்டுவதற்க்கு வசதியாக அணைத்து பேருந்து நிலையம், விமான நிலையம், ரயில் நிலையம், தியேட்டர் முதலிய பொது மக்கள் கூடும் இடங்களில் பாலூட்டும் அறை அமைத்தால் இப்பிரச்சனைக்கு சரியான தீர்வாக அமையும் என்றான். ஆம் ஜீவா இது தான் சரியான தீர்வாக இருக்கும்.

ஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது என்றான் ஜீவா, என்ன சிக்கல் 
இருக்கும் ஜீவா என்று கேட்டேன். இப்பிரச்சனை பற்றி நாம் மட்டும் பேசினால் தீர்வு கிடைக்காது, மக்கள் இப்பிரச்சனை எழுப்பினால் மட்டுமே அனைத்து பொது இடங்களிலும் பாலூட்டும் அறை அமைக்கப்படும். ஆனால் எப்படி மக்கள் மத்தியில் இப்பிரச்சனையை கொண்டு செல்வது என்று யோசிக்கிறேன் என்றான் ஜீவா.

ஜீவா இதற்க்கு என்னிடம் ஒரு தீர்வு இருக்கிறது என்றேன், என்ன தீர்வு? ரமேஷ் சொல்லு. ஜீவா எனக்கு நன்றாக கதை எழுத வரும் என்பது உனக்கு தெரியும், இப்பிரச்சனை குறித்து ஒரு கதை எழுதி அதை பத்திரிக்கையில் வெளியிட்டால் நிச்சயம் மக்கள் அதனை படிப்பார்கள், அதன் மூலம் மக்களுக்கு இப்பிரச்சனை குறித்து விழிப்புனர்வு ஏற்படும். பிறகு முடிவு மக்கள் கையில்.

சரியான தீர்வு என்றான் ஜீவா. ரமேஷ் எனக்கு தெரிந்த ஒரு பத்திரிக்கை ஆசிரியர் இருக்கிறார் நீ எழுதும் கதை அவரிடம் கொடுப்போம் அவர் பத்திரிக்கையில் வெளியிட உதவி செய்வார் என்றான். ஜீவா நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தான், நான் நாளைக்கு எங்களுக்கு நடந்தவற்றையே கதையாக எழுதுகிறேன். திங்கட்கிழமை காலையில் நாம் இருவரும் அந்த பத்திரிக்கை ஆசிரியரை நேரில் சந்தித்து கதையை கொடுத்து பத்திரிக்கையில் வெளியிட உதவி கேட்போம் என்றேன். சரி ரமேஷ் மறக்காமல் தீர்வுடன் கதை எழுது என்று அக்கறையோடு சொன்னான் ஜீவா. கண்டிப்பா நீ சொன்ன தீர்வை தான் எழுதுவேன் ஜீவா, சரி வா ரமேஷ் விமலாவிடம் இதை தெரிவிப்போம் அப்போதான் அவள் மனது நிம்மதி அடையும் என்றான் ஜீவா.
விமலாவிடம் நானும், ஜீவாவும் கதை எழுதுவதை பற்றி கூறினோம், அவளும் அதற்க்கு சம்மதம் தெரிவித்தாள். கதை தயார் படுத்துமாறு கூறிவிட்டு சென்றான் ஜீவா.

நான் கதை எழுத தயார் ஆனேன், ஞாயிற்றுக்கிழமை மதியம் கதை எழுதி முடித்து விட்டேன். விமலாவிடம் கதையை காண்பித்தேன் அவள் படித்துவிட்டு நன்றாக வந்துள்ளது என்று கண்ணீர் விட்டால். பிறகு ஜீவா விட்டிற்கு சென்று கதையை காண்பித்தேன், ஜீவாவும் படித்துவிட்டு நன்றாக வந்துள்ளது என்றான்.

பிறகு திங்கட்கிழமை கலையில் இருவரும் சென்று பத்திரிக்கை ஆசிரியரை சந்தித்து கதையை காண்பித்தோம், அவர் படித்துவிட்டு கண்டிப்பாக அடுத்த வாரம் பத்திரிகையில் உங்கள் கதை வரும் என்றார் அவரிடம் நன்றி தெரிவித்துவிட்டு இருவரும் வெளியே வந்தோம். வெளியே வந்தவுடன் ரமேஷ் அடுத்த வாரம் பத்திரிகையில் உன் கதை வெளிவரும் பிறகு முடிவு மக்கள் கையில் நம்பிக்கையுடம் காத்திரிப்போம் என்றான் ஜீவா. பிறகு இருவரும் அலுவலகத்துக்கு சென்றோம்.

பத்திரிகை ஆசிரியர் கூறியது போலவே அடுத்த வாரத்தில் கதை பத்திரிகையில் வெளியானது, மக்கள் இப்பிரச்சனையை கையில் எடுப்பார்கள், அதன் மூலம் அனைத்து பொது இடங்களிலும் பாலூட்டும் அறை அமைக்கப்படும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன். 

.....முற்றும்.....  


-சதீஸ் கார்க்கி