மனித
வள மேம்பாட்டு அமைச்சகம் 2014ஆம் ஆண்டு இந்திய முழுவதும் உள்ள அரசாங்கங்கப் பள்ளிகளின் கழிப்பிட
வசதிகள் குறித்து பள்ளி கல்வித்துறை நடத்திய ஆய்வின் படி தேசத்தில் உள்ள 1,01,443 பெண்கள் பள்ளிகள் கழிப்பறை வசதியாற்றவையாகவும்,
கழிப்பறைகள் பழுதடைந்து உபயோகப்படுத்த முடியாத நிலையில் 87,984 மகளிர் பள்ளிகள் உள்ளன. இந்த ஆய்வின்
அறிக்கை மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் அதிகார்பபூர்வ
வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய சுதந்திரம் அடைந்த பின் கடந்த 67 ஆண்டுகளில் கல்வித்துறையில்
முன்னேற்றம் அடைந்தாலும் கழிப்பறை வசதி இல்லாமல்,பயன்படுத்த முடியாத நிலையில் 1,89,427 அரசாங்க பள்ளிகள்
இயங்கிகொண்டிருகின்றன. இதில் தொடக்கப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் அடங்கும்.
இந்த ஆய்வின் அறிக்கை அதிர்ச்சியளிக்கிறது .
வரிசை எண்
|
யூனியன் பிரதேசங்கள், மாநிலங்கள் பெயர்
|
கழிவறை இல்லாத பெண்கள் பள்ளிகளின் எண்ணிக்கை
|
செயல்படாத கழிவறை கொண்ட பெண்கள் பள்ளிகளின் எண்ணிக்கை
|
1
|
அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள்
|
23
|
10
|
2
|
ஆந்திரப் பிரதேசம்
|
9114
|
8329
|
3
|
அருணாசலப் பிரதேசம்
|
871
|
960
|
4
|
அசாம்
|
6890
|
3956
|
5
|
பீகார்
|
17982
|
9225
|
6
|
சண்டிகர்
|
0
|
0
|
7
|
சத்தீஸ்கர்
|
2753
|
3667
|
8
|
தாத்ரா நாகர் ஹவேலி
|
14
|
12
|
9
|
டாமன் டையூ
|
0
|
0
|
10
|
தில்லி
|
0
|
0
|
11
|
கோவா
|
22
|
31
|
12
|
குஜராத்
|
87
|
80
|
13
|
ஹரியானா
|
380
|
156
|
14
|
இமாசலப் பிரதேசம்
|
460
|
46
|
15
|
ஜம்மு & காஷ்மீர்
|
6294
|
2797
|
16
|
ஜார்க்கண்ட்
|
4736
|
3979
|
17
|
கர்நாடக
|
12
|
30
|
18
|
கேரளா
|
82
|
62
|
19
|
லட்சத்தீவுகள்
|
0
|
0
|
20
|
மத்தியப் பிரதேசம்
|
9130
|
9271
|
21
|
மகாராஷ்டிரா
|
1226
|
2190
|
22
|
மணிப்பூர்
|
67
|
487
|
23
|
மேகாலயா
|
3781
|
1063
|
24
|
மிசோரம்
|
6
|
402
|
25
|
நாகாலாந்து
|
96
|
254
|
26
|
ஒடிசா
|
8196
|
12520
|
27
|
பாண்டிச்சேரி
|
0
|
0
|
28
|
பஞ்சாப்
|
544
|
372
|
29
|
ராஜஸ்தான்
|
2224
|
2990
|
30
|
சிக்கிம்
|
8
|
24
|
31
|
தமிழ்நாடு
|
1442
|
958
|
32
|
தெலுங்கானா
|
7945
|
7881
|
33
|
திரிபுரா
|
352
|
169
|
34
|
உத்தரப் பிரதேசம்
|
2355
|
5971
|
35
|
உத்தராஞ்சல்
|
743
|
1005
|
36
|
மேற்கு வங்கம்
|
13608
|
9087
|
மொத்தம்
|
1,01,443
|
87,984
|
|
மொத்தம்
|
1,89,427
(கழிப்பறை வசதியற்ற, செயல்படாத கழிவறை
கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கை)
|
||
இதனை நாம் வேறொரு
கோணத்தில் உதாரணத்தோடு அணுகுவோம். கழிப்பறை வசதி இல்லாமல்,பயன்படுத்த
முடியாத நிலையில் 1,89,427 அரசாங்க (பெண்கள்) பள்ளிகள்
இயங்கிகொண்டிருகின்றன என்பதனை நினைவில்
கொள்க. உதரணமாக 1,89,427 பள்ளிகளிலும் தலா 100 பெண்கள் கல்வி கற்கின்றனர் என்றால்
ஒட்டுமொத்த மாணவிகளின் எண்ணிக்கை 1,89,42,700 ஆக இருக்கும். உதரணமாக 1,89,427 பள்ளிகளிலும் தலா 5 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள் என்றால் ஒட்டுமொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 9,47,135 ஆக இருக்கும்.இதனை சரியாக
குறிப்பிட வேண்டும் என்றால் 1,89,42,700 மாணவிகள், 9,47,135 ஆசிரியர்கள் கழிப்பறை வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர்,. இந்த
எண்ணிக்கையில் மாற்றுதிரனாளி மாணவிகளும், கர்ப்பிணி ஆசிரியர்களும் அடங்கும்.
இத்தகைய பள்ளிகளில் இருக்கும் துப்புரவு பணியாளர்கள், இதர பணியாளர்களின்
எண்ணிக்கையை சேர்த்து கொண்டால் அதன் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும்.
இத்தகைய பள்ளிகளில் பயிலும் மாணவிகள், பணியாற்றுகின்ற ஆசிரியர்கள் பெரும்பாலும் பள்ளிசுவர்களின் பின்புறம்,
மரங்களின் மறைவில்,புதர்களின் மறைவில்/ பின்புறம் தான் உடல் உபாதைகளை (சிறுநீர்,மலம்)
கழிக்கிறார்கள். தொடர்ந்து இத்தகைய இடங்களில் கழிப்பதால் இவ்விடம்
கொசுக்களுக்கும், சிறு புச்சிகளுக்கும் இருப்பிடமாக மாறுகிறது. மேலும்
இவ்விடத்திற்கு உடல் உபாதைகளை கழிக்க வரும் மாணவிகள், ஆசிரியர்களை கொசு, இதர
புச்சிகள் கடிக்கின்றன, இதனால் உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. தொடர்ந்து இத்தகைய
இடங்களில் கழிப்பதால் துர்நாற்றம் வீசுகிறது, கழிவுகளை மிதித்து வகுப்பறைக்கு
செல்வதானால் பள்ளி வளாகம் சுகதரமற்ற நிலையில் இருக்கிறது(இயங்குகிறது).
மறைவான இடங்கள்
இல்லாத, பள்ளியை சுற்றிலும் கட்டிடங்கள் இருக்கின்ற பள்ளிகளில் பயிலும் மாணவிகள்,
பணியாற்றுகின்ற ஆசிரியர்கள் உடல் உபாதைகளை கழிக்க வழியில்லாமல் அதனை கட்டுபடுத்தி
கொள்கின்றனர். இதனை நாம் வேறொரு கோணத்தில் கவனிப்போம். பெரும்பாலான பள்ளிகள் காலை 8.30 மணிக்கு தொடங்கி மாலை 4.30 மணிக்கு நிறைவுபெறுகிறது. காலை 8.30 மணிக்கு பள்ளி தொடங்குகிறது என்றால் 7.30 மணிக்கே விட்டிலிருந்து மாணவிகள், ஆசிரியர்கள் புறப்படுகிறார்கள்,
இவ்வாறே 4.30 மணிக்கு பள்ளி நிறைவடைந்த பிறகு விட்டிற்கு வந்து சேர மணி 5.30 ஆகிறது. காலை 7.30 மணியுலிருந்து மாலை 5.30 மணி
வரை(10 மணி நேரம்)
மாணவிகள்/ஆசிரியர்கள் உடல் உபாதைகளை கழிக்க செல்லாமல் தொடர்ந்து (தினத்தோறும்)
கட்டுப்படுத்திக் கொண்டே இருக்கின்ற காரணத்தால் சிறுநீரகத்தில் கல் தோன்றுகிறது. (வேறு
சில உடல்ரிதியான பிரச்சனைகளையும் எதிர்கொள்கிறார்கள்)
அரசாங்க பள்ளிகளின்
நிலைமையை போலவே சென்னையில் உள்ள காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியிலும்
கழிப்பறைகள் பழுதடைந்து உபயோகப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது,
இக்கல்லூரியில் படிக்கும் மாணவிகளும், பணியாற்றும் ஆசிரியர்களும் மறைவான இடத்தில
தான் உடல் உபாதைகளை கழிக்கிறார்கள். இக்கல்லூரியில் மொத்தம் 4,300க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி கற்கின்றனர், காவலராக, இதர பணியாளராக
ஆண்கள் பணிபுரிகிறார்கள். ஆண்களும் உடல் உபாதைகளை கழிக்க மறைவான இடத்தையே
நாடுகிறார்கள். இவ்வாறு மறைவான இடத்தில பெண்கள் உடல் உபாதைகளை கழிக்கும்பொழுது
ஆண்களின் குரலோ, காலடி சத்தமோ கேற்க்கும் பட்சத்தில் அப்பெண்கள் அடையும்
பயத்தையும், மன வேதனையும் விவரிக்க இயலாத துயரத்தை அடைகிறார்கள்.
மாதவிடாய் காலங்களில்
(காயிதே மில்லத் கல்லூரி, 1,89,427 பள்ளிகள்) மாணவிகள், ஆசிரியர்கள் உடை
மாற்றிக்கொள்ளவோ, தூய்மைபடுத்திக் கொள்ளவோ வசதிகள் இல்லாமல் அவதிப் படுகிறார்கள்.குளிர் காலங்களில் வெட்பநிலை மாற்றத்தால் உடல் உபாதை அதிகமாக வெளியேற்றப்படும், உடல் உபாதைகளை கழிக்க முடியாமல்
இக்காலங்களில்(குளிர்) மாணவிகள்,
ஆசிரியர்கள் மிகவும் அவதிப்
படுகிறார்கள்.
மழைக்காலங்களில் மாணவிகள், ஆசிரியர்களின் நிலைமை
மிகவும் மோசமாக உள்ளது. உடல் உபாதைகளை கழிக்க மறைவான இடங்களுக்கு செல்லமுடியாமல்
தவிக்கிறார்கள். இத்தகைய இடங்களில் கழிக்கப்படும் உடல் உபாதைகள் மழைநீருடன் கலந்து வளாகத்துக்குள் தேங்கி நிற்கிறது,
இதனால் பள்ளி,கல்லூரி வளாகம் மாசடைகிறது. மேலும் இவ்வாறு தேங்கும் மாசடைந்த தண்ணீரில் வசிக்கும் கொசுக்களின் முலம் (டெங்கு)காய்ச்சல் மாணவிகள், ஆசிரியர்களுக்கு பரவுகிறது
இத்தகைய வேதனைகளை
சுமந்து கொண்டு மாணவிகளால் எவ்வாறு முழுமனதுடன் கல்வி கற்க இயலும்?, ஆசிரியர்களால்
எவ்வாறு சிறப்பாக பண்ணியாற்ற இயலும்?
-சதீஸ் கார்க்கி.
ஆதாரம்: